Thursday, September 12, 2019

TNPSC Group 4: தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு!





தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுற்ற நிலையில் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது

General Tamil

General English

General Science

Wednesday, September 11, 2019

மானக்கேடாக கேள்வி கேட்ட லாஸ்லியா அப்பா.. காதலுக்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாரா கவின்?


சென்னை: லாஸ்லியாவின் அப்பா பேசிய பேச்சால் உடைந்து போன கவின், பிக் பாஸ் வீட்டில் இருந்து தன் காதலி வெற்றி பெற வேண்டும் என வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறி விட்டதாக நேற்று முன்தினம் இரவு முதல் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சரவணன் போலவே கண்ணைக் கட்டி, கன்பெக்‌ஷன் ரூமில் கவின் நிற்கிறார். அதிக தெளிவில்லாத அந்த புகைப்படத்தால் கவின் ஆர்மியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அது இன்றைய எபிசோடில் தான் காட்டப்படும். எனவே, நேற்று ஒளிபரப்பான எபிசோட்டில் கவின் இருந்தார். லாஸ்லியா அப்பா அதோடு, நேற்று லாஸ்லியாவின் பெற்றோர் வருகையால் பிக் பாஸ் வீடே பெரும் பரபரப்பாக இருந்தது. மற்ற போட்டியாளர்களின் பெற்றோர் போல் இல்லாமல், லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும், அவரை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார். இதனால் சக போட்டியாளர்களைப் போலவே மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். கவின் அதிர்ச்சி முதலில் லாஸ்லியாவின் அம்மா உள்ளே வந்த போதே, கவின் பெரும் அதிர்ச்சி அடைந்தார். அடுத்து சூறாவளியாக உள்ளே வந்த லாஸ்லியாவின் அப்பா பேசியதைக் கேட்டு அவர் மிரண்டு விட்டார் என்று தான் கூற வேண்டும். நிச்சயம் இப்படி ஒரு எதிர்ப்பு அவர்களது காதலுக்கு வரும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. மானம் லாஸ்லியா தன் பெற்றோரிடம் ஒரு புறம் கதறிக் கொண்டிருக்க, பிக் பாஸ் வீட்டிற்குள் கவின் மறுபுறம் அழுது கொண்டிருந்தார். இது பார்ப்பதற்கே மிகவும் உருக்கமாக இருந்தது. ஆனால், லாஸ்லியாவின் அப்பா பேசியது அனைத்துமே நியாயமான கருத்துக்கள் தான். ஒரு மிடில் கிளாஸ் தந்தையாக பணத்தை விட தனக்கு மானம் தான் முக்கியம் என அவர் பேசியதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மறைமுக எச்சரிக்கை ‘இது ஒரு கேம். அதை அப்படியே விளையாடு. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடு' என மகளுக்கு அறிவுரை கூறியுள்ளனர் லாஸ்லியாவின் பெற்றோர். அதோடு, கவின் லாஸ்லியாவை வைத்து விளையாடுவதாக அவரது சகோதரிகளும் மறைமுகமாகத் தெரிவித்தனர். இதனால் லாஸ்லியா பெரும் குழப்பத்தில் இருக்கிறார். கவின் முடிவு இதனால் இனி கவினுடன் அவர் வழக்கம் போல் பேசுவாரா என்பதே சந்தேகம் தான். இதனால் மனமுடைந்த கவின், ஓவியா மாதிரி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, தன்னால் தான் லாஸ்லியாவின் பெயர் கெட்டு விட்டதாகவும், தான் வெளியே சென்று விட்டால், இனி லாஸ்லியா ஒழுங்காக விளையாடுவார் என அவர் நினைத்துள்ளார். சிறைக்குப் போன அம்மா எனவே தான் அவர் அன்று நள்ளிரவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது இன்றைய எபிசோட்டில் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தனது அம்மா பண மோசடியில் சிறைக்கு சென்ற தகவலும் அவருக்கு தெரிந்து விட்டதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. குழப்பத்தில் ரசிகர்கள் இவற்றில் எது நிஜம் எனத் தெரியவில்லை. அந்தப் புகைப்படத்தின் தெளிவற்ற தன்மையும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இப்படி ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற வேண்டியது தேவை தானே.

கோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி


டெல்லி: கோவை மாநகரில் லஷ்கர் தொய்பா தீவிரவாதிகள் புகுந்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து நடந்த தீவிர தேடுதல் வேட்டை மற்றும் விசாரணையில், எந்த ஒரு நடமாட்டமும் இல்லை என்று தெரிய வந்திருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கோவை மாநகர மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆகஸ்ட் 22ம் தேதி மத்திய உளவுத்துறை, தமிழகத்திற்குள் 6 லஷ்கர் தொய்பா தீவிரவாதிகள் புகுந்திருப்பதாகவும், அவர்கள் கோவையை மையமாகக் கொண்டு நாச வேலைகளில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டைகள் மேற்கொள்ளப்பட்டன.


குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பும், தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்து வந்த விசாரணை உள்ளிட்டவற்றுக்குப் பின் தற்போது கோவை நகரில் லஷ்கர் தொய்பா தீவிரவாதிகள் யாரும் இல்லை என்று தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.
உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து கோவையில் போலீஸார் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து நாங்கள் உஷார் நிலையில் இருக்கிறோம் என்று போலீஸ் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


போக்குவரத்து விதிமீறல்களால் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு


திண்டுக்கல், செப். 10-  போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் ஒலி, ஒளி, காற்று மாசு காரணமாக மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத் துவதாக உள்ளன
2019 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வாகனங்களுக் கான பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்ட ணம் மற்றும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் வசூலிக் கப்படும் அபராதத் தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தலைக்கவசத்திற்கான முக்கியத்துவம் வாகன ஓட்டிகளின் பிற விதிமீறல்களுக்கு அளிக்கப்படுவதில்லை. குறிப்பாக, அதிக ஒலி எழுப்பியும், அதிக ஒளியை உமிழ்ந்தும் பிற வாகன ஓட்டி களுக்கும், பொதுமக்களுக்கும் இடை யூறாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பொதுமக்களிடையே ஒளி மற்றும் ஒலி மாசு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், இதனை ஒரு விதிமீறலாக யாரும் கருதுவதில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக விற் பனைக்கு வரும் இருசக்கர வாகனங்கள், சாவியை பொருத்திய உடனே எல்..டி. முகப்பு விளக்கு எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இத னைப் பின்பற்றி, பழைய இருசக்கர வாக னங்களிலும் எல்இடி விளக்குகள் முகப்பு விளக்குகளாக பொருத்தப்படுகின்றன. மேலும், வாகனத்தின் முன்பகுதியில் 3, 4 என விருப்பத்திற்கு ஏற்ப "எல்இடி' விளக்குகள் பொருத்தப்படுகின்றன. அதேபோல் முகப்பு விளக்குகளின் மேல் கருப்புவில்லை ஒட்டும் நடைமுறை முற்றிலுமாக கைவிடப்பட்டுவிள்ளது.
இதேபோல், இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங் களில் பயன்படுத்தப்படும் ஒலிப்பான்கள் (ஹாரன்), அதிக ஒலி எழுப்புவதாகவும், மிருகங்களைப் போல் ஒலி எழுப்புவ தாகவும் இருக்கின்றன. திடீரென ஒலிக்கப்படும் இந்த வகை ஒலிப்பான்கள், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின் றன. மேலும், சில இளைஞர்கள் பயன் படுத்தும் இருசக்கர வாகனங்களின் இரைச்சல், வாகன ஓட்டிகள் மட்டு மின்றி, பாதசாரிகளுக்கும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.

இதுதொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஃபெட்ரிக் ஏங்கல்ஸ் கூறியது:
மோட்டார் வாகனச் சட்டப்படி 2 முகப்பு விளக்குகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சொகுசுப் பேருந்து, தனியார் பயணிகள் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டுமின்றி மோட்டார் சைக்கிள்கள் வரையிலும் 4-க்கும் மேற் பட்ட விளக்குகள் பொருத்தப்படுகின்றன. முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லை ஓட்டுவது என்பது, சாலை பாதுகாப்பு வார விழா நடைபெறும் போது மட்டுமே ஓட்டப்படும் நிகழ்வாக மாறிவிட்டது. காற்று ஒலிப்பான் தடை செய் யப்பட்டு பல ஆண்டுகளாகியும், தற்போ தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கனரக வாகனங்களில் புகை பரிசோதனை முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதனை வட்டார போக்குவரத்து அலு வலர்களும் கண்காணிப்பதில்லை. காருக்கு மட்டுமே பயன்படுத்த வேண் டிய ஒலிப்பான்கள், இருசக்கர வாகனங் களில் பொருத்தப்படுகின்றன. இது போன்ற விதிமீறல்களால் மறைமுகமாக சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.


JT

திருப்பூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு வெளிநாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகி வரு...